ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்: நடிகர் சூர்யா 

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்: நடிகர் சூர்யா 
Updated on
1 min read

விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் என மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உழவே தலை

விவசாயிகளின் அறப்போராட்டம் வென்றது நம்பிக்கை அளிக்கிறது. ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. உறுதியாக இறுதிவரை போராடிய விவசாய பெருமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…" எனப் பதிவிட்டுள்ளார்

முன்னதாக, இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in