பாலா இயக்கத்தில் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா
Updated on
1 min read

பாலா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

'நாச்சியார்' படத்துக்குப் பிறகு, பாலா இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அவருடைய இயக்கத்தில் உருவான 'வர்மா' படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. இதற்குத் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலே காரணம்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையொன்றைத் தயார் செய்தார் பாலா. இதில் நாயகனாக நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தமும் ஆனார். இந்தப் படத்தைத் தயாரிக்க சூர்யாவின் 2டி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பாலாவின் கதையைக் கேட்ட சூர்யா, இதில் நானே நடிக்கிறேன் என்று கூறி, தேதிகள் கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியெம் பணிபுரியவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in