கார்த்திக்கு நாயகியாகும் அபர்ணா பாலமுரளி?

கார்த்திக்கு நாயகியாகும் அபர்ணா பாலமுரளி?
Updated on
1 min read

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள செய்திகள் வெளியாகியுள்ளன.

'பொன்னியின் செல்வன்' படத்தை முடித்துவிட்டு, முத்தையா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. சூர்யாவின் 2 டி நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது.

தற்போது இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு. மேலும், கார்த்தியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வும் செய்யப்பட்டு வருகிறது. இதில் கார்த்திக்கு நாயகியாக அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூரரைப் போற்று' படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி. அண்ணனைத் தொடர்ந்து தற்போது தம்பி நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தையா படத்தை முடித்துவிட்டுத் தான், மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் கார்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in