Published : 20 Jul 2021 10:04 PM
Last Updated : 20 Jul 2021 10:04 PM

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

சேப்பாக்கம் தொகுதியில் ஜெயித்தவுடன் தொடர்ச்சியாகத் தொகுதியில் பணிபுரிந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதி - ஆரவ் சம்பந்தப்பட்ட சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'ஆர்டிகிள் 15' ரீமேக், 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். இந்தப் படங்களை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தைத் தொடங்கும் முன்பு, துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் பணிகளை முடிக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x