ஓடிடியில் வெளியாகிறது நெற்றிக்கண்

ஓடிடியில் வெளியாகிறது நெற்றிக்கண்
Updated on
1 min read

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்பட்டு, எப்போது வெளியிடுவது என்ற சூழலே தெரியாமல் உள்ளது.

இதனால், 'நெற்றிக்கண்' படக்குழுவினர் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in