யுவனுக்குப் புகழாரம் சூட்டிய எஸ்.ஜே.சூர்யா

யுவனுக்குப் புகழாரம் சூட்டிய எஸ்.ஜே.சூர்யா
Updated on
1 min read

'பொம்மை' படத்தின் பணிகளுக்காக யுவனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

'மான்ஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'பொம்மை'. இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் இன்னும் இப்படம் வெளியாகாமல் உள்ளது.

'பொம்மை' படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் கதைக்களம், யுவனின் பணிகள் ஆகியவை குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்த வீடியோவை முன்வைத்துப் பலரும் யுவனைப் பாராட்டத் தொடங்கினார்கள்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக யுவன் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என்னை நம்புங்கள், 'பொம்மை' திரைப்படத்தில் யுவனின் பாடல்கள் அற்புதமாக இருக்கும். பின்னணி இசை முற்றிலும் வேறொரு தளத்தில் அட்டகாசமாக இருக்கும்".

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in