செந்தில் நாயகனாகும் படம்: படப்பிடிப்பு தொடக்கம்

செந்தில் நாயகனாகும் படம்: படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

செந்தில் நாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த செந்தில் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார். சமீர் பரத்ராம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை 'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 1) இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆயுள் தண்டனை முடிந்து கிராமத்துக்கு வரும் நபராக செந்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் செந்தில்.

இந்தப் படத்துக்கு முன்னதாக பிரேம்ஜி நாயகனாக நடித்துள்ள 'சத்திய சோதனை' படத்தை இயக்கியுள்ளார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தையும் சமீர் பரத்ராம்தான் தயாரித்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in