சுந்தர்.சிக்கு வில்லனாகும் ஜெய்

சுந்தர்.சிக்கு வில்லனாகும் ஜெய்

Published on

சுந்தர்.சி நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தில் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பான படம் 'நாங்க ரொம்ப பிஸி'. பத்ரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பத்ரி தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார். இதையும் சுந்தர்.சியே தயாரிப்பது மட்டுமன்றி, நாயகனாகவும் நடிக்கவுள்ளார். இதில் வில்லனாக நடிக்க ஜெய் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தைத் திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in