Published : 13 Oct 2015 12:00 PM
Last Updated : 13 Oct 2015 12:00 PM
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கத்ரீன் தெரசா, டாப்ஸி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'கான்'. யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தார்கள்.
சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடித்துவிட்டு இப்படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருந்தார் சிம்பு.
இந்நிலையில், 'கான்' திரைப்படத்துக்கு பணம் அளிக்க எந்த ஒரு பைனான்சியரும் முன்வரவில்லை. எப்போதுமே ஒரு படம் தொடங்கிய உடன் தான் பைனான்சியர் பணம் அளிக்க முன்வருவார்கள். இப்படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்ட போதும், யாருமே பணம் அளிக்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
'கான்' படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என செல்வராகவன் ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார்.
ட்விட்டரில் செல்வராகவன் கூறியதாவது:
'' 'கான்' படம் குறித்து நிறைய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சில விஷயங்களை நான் விளக்க வேண்டிய தேவை இருக்கிறது.
என் இதயத்துக்கு நெருக்கமான கதை 'கான்'. என் படங்களில் மிக முக்கியமானது. ஆனால், தற்போது இந்தப் படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
பைனான்ஸ் சீரமைப்புகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். சிம்பு மற்றும் கான் படக்குழுவை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்'' என செல்வராகவன் கூறியுள்ளார்.
செல்வராகவன் தன் அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்க முடிவு செய்திருக்கிறார். இப்படத்தில் தனுஷ் நடிப்பது மட்டுமன்றி, தயாரிப்பார் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
'கான்' கைவிடப்பட்ட செய்தியால், சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது உலகளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி தீர்த்தார்கள் சிம்பு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT