Last Updated : 20 Sep, 2015 11:45 AM

 

Published : 20 Sep 2015 11:45 AM
Last Updated : 20 Sep 2015 11:45 AM

த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் மீது ஆனந்தி காட்டம்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னிடம் சொன்ன கதையை படமாக்கவில்லை என்று ஆனந்தி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ஜெயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இப்படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருந்தாலும், பல தரப்பினர் இப்படத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்கும், காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் படத்தின் நாயகி ஆனந்தியும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து ஆனந்தி தெரிவித்திருப்பது "இயக்குநர் ஆதிக் என்னிடம் சொன்ன கதையைப் படமாக்கவில்லை. கொடுக்கப்பட்ட வசனங்களும், படமாக்கப்பட்ட காட்சிகளும் வித்தியாசமாக இருந்ததால், ஏன் இப்படி? என்று கேட்டேன். அதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை.

முதலில் நான்தான் முதன்மை நாயகி என்றும், வேறொரு நாயகியும் இருப்பார் என்றும் சொன்னார். போஸ்டர்களில், 2 நாயகிகள் நடித்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். கதை மாற்றம், பாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாதது, இரட்டை அர்த்த வசனங்கள், க்ளைமாக்ஸ் காட்சியை சொன்னபடி படமாக்காதது என, இயக்குனர் ஆதிக் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

‘கயல்’, ‘சண்டி வீரன்’ படங்களில் எனது பாத்திரம் கண்ணியமாக இருந்தது. அதைக் கெடுப்பது போல், இதில் என் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஏன் இப்படி செய்தீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டபோது தரக்குறைவான வார்த்தைகளில் திட்டினார்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் ஆனந்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x