ஓராண்டுக்கு பிறகு ‘சூப்பர் மாம்’

ஓராண்டுக்கு பிறகு ‘சூப்பர் மாம்’
Updated on
1 min read

மிகுந்த எதிர்பார்ப்போடும், வரவேற்போடும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. திரைத் துறை, சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளோடு கலந்துகொண்டு அசத்திய இந்த நிகழ்ச்சியில் அகிலாவும், அவரது மகள் தனவிருத்திகாவும் ‘சூப்பர் மாம்’ பட்டத்தை தட்டிச் சென்றனர். காயத்ரி - தாரக், சாந்தி - தருண் ஆகியோர் 2, 3 இடங்களைப் பிடித்தனர்.

முதல் சீசன் போலவே இந்த சீசனும் அதிக அளவில் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், உடனடியாக 3-வது சீசன் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது. ஆனால், சிறு இடைவெளிக்குப் பிறகு ஆரம்பித்தால் சுவாரஸ்யம் கூடும் என்பதால் இன்னும் ஓராண்டுக்கு பிறகே அடுத்த சீசன் என்று தொலைக்காட்சி தரப்பு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in