Published : 07 Feb 2020 08:27 PM
Last Updated : 07 Feb 2020 08:27 PM

'மூக்குத்தி அம்மன்' படப்பிடிப்பு நிறைவு

'மூக்குத்தி அம்மன்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக, படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

'எல்.கே.ஜி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். இதில் நடித்திருப்பது மட்டுமன்றி நண்பர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, மெளலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதைக்களம் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள பகுதி என்பதால், அங்கேயே முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்கினார்கள்.

சுமார் 90% படப்பிடிப்பை அங்கேயே முடித்துவிட்டுச் சென்னை திரும்பியது படக்குழு. சில நாட்கள் முன்பு இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற்று வந்தது. இதில் நயன்தாரா சம்பந்தப்பட்ட சில முக்கியமான காட்சிகளை பெரும் கூட்டத்துடன் காட்சிப்படுத்தியுள்ளது படக்குழு.

இதன் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 7) மாலையுடன் முடிவடைந்தது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார். கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்றும், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x