பேச்சுவார்த்தை தோல்வி: உறுதியானது 'டகால்டி' Vs ’சர்வர் சுந்தரம்’

பேச்சுவார்த்தை தோல்வி: உறுதியானது 'டகால்டி' Vs ’சர்வர் சுந்தரம்’
Updated on
1 min read

ஒரே தேதியில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெளியாவதைத் தடுக்க நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'டகால்டி' ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு. விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'டகால்டி' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்ட வேலையில், கெனன்யா பிலிம்ஸ் நிறுவனமும் தங்களுடைய தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் வெளியீட்டு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்த இரண்டு போட்டிப் போட்டுக் கொண்டு, தங்களுடைய படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. எங்களுக்கு இந்தத் தேதியை விட்டால், வேறு தேதி கிடைக்காது என்று இரண்டு படக்குழுவுமே கூறினார்கள். ஆனால், தொடர் பேச்சுவார்த்தையில் யாராவது ஒருவர் ஒரு வாரம் தள்ளி வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. தற்போது 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியீட்டை உறுதி செய்துள்ளன. தற்போது 'டகால்டி' படத்தின் தயாரிப்பாளர் தங்களுடைய படம் ஜனவரி 31-ம் தேதி வருவது உறுதி என்று அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in