விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஆனதன் பின்னணி

விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஆனதன் பின்னணி
Updated on
1 min read

'நெற்றிக்கண்' படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் ஏன் தயாரிப்பாளர் ஆனார் என்பதன் பின்னணி வெளியாகியுள்ளது.

'அவள்' படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'நெற்றிக்கண்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன். இது தொடர்பான அறிவிப்பு வெளியானபோது, திரையுகில் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

ஏனென்றால், நயன்தாரா படங்கள் என்றாலே அவரது மேலாளர் ராஜேஷ் தான் தயாரிப்பாளராக இருப்பார். பல வருடங்களாக அவர் தான் நயன்தாராவின் கால்ஷீட் தேதிகளை மேற்பார்வையிட்டு வந்தார். மேலும், அவரை வைத்து 'அறம்', 'ஐரா' ஆகிய படங்களையும் தயாரித்தார். இவரை விட்டுவிட்டு ஏன் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் என்று கேள்வி பலருக்கும் எழுந்தது.

இது தொடர்பாக விசாரித்த போது, நயன்தாராவுக்கும் ராஜேஷுக்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது இருவரும் பேசிக் கொள்வதே இல்லை. ஆகையால் அவரோ தனது அடுத்தடுத்த படங்களின் தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

இதனால், வேறு யாரிடமும் படத் தயாரிப்பைக் கொடுக்காமல் தன் காதலர் விக்னேஷ் சிவனையே தயாரிப்பாளராக ஆக்கியுள்ளார் நயன்தாரா. இந்தப் படமும் கொரியன் படமான ’ப்ளைண்ட்' படத்தின் ரீமேக்காககும். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in