சிம்பு - கெளதம் மேனன் படத்தின் நாயகி நீக்கம்

சிம்பு - கெளதம் மேனன் படத்தின் நாயகி நீக்கம்
Updated on
1 min read

சிம்பு - கெளதம் மேனன் படத்தில் நாயகியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

சிம்பு - கெளதம் மேனன் இணைப்பில் நீண்ட நாட்களுக்கு முன்பாக பெயரிடப்படாமல் படம் ஒன்று தொடங்கப்பட்டது. அப்படத்தில் நாயகியாக பல்லவி சுபாஷ் நடித்து வந்தார்.

இடையே அஜித் படத்தை இயக்க கெளதம் மேனன் ஒப்பந்தமானதால், சிம்பு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அஜித் படமான 'என்னை அறிந்தால்' முடித்தவுடன், சிம்பு படத்தை இயக்குவேன் என்று கெளதம் மேனன் அறிவித்தார்.

'என்னை அறிந்தால்' வெளியான உடன், சிம்பு படத்தை துவக்கினார் கெளதம் மேனன். படத்துக்கு 'அச்சம் என்பது மடமையடா' என்று தலைப்பிட்டார்.

இந்நிலையில், அப்படத்தில் நாயகியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் படத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.

வட இந்தியாவில் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார் பல்லவி சுபாஷ். அஜித் படத்துக்காக சிம்பு படம் நிறுத்தப்பட்டதால், பல்லவி சுபாஷ் கொடுத்த தேதிகள் வீணானது. தற்போது தேதிகள் கேட்ட போது, நாடகங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டதால் பல்லவி சுபாஷால் சிம்பு படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து படக்குழு, பல்லவி சுபாஷை படத்தில் இருந்து நீக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக பல்வேறு முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தேதிகள் பிரச்சினையால் யாருமே நடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது படக்குழு சிம்புவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஒருவருக்கு வலை வீசி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in