இனிமேல் வித்தியாசமான படங்கள் செய்ய மாட்டேன்: சிம்பு

இனிமேல் வித்தியாசமான படங்கள் செய்ய மாட்டேன்: சிம்பு
Updated on
1 min read

இனிமேல் வித்தியாசமான கதைக்களங்கள் உள்ள படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, மஹத், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சிம்பு அளித்த பேட்டியில், வித்தியசாமான படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் சிம்பு தெரிவித்திருப்பது, "முன்பு படம் பண்ணும் போது, ஒரு படம் கமர்ஷியலாக செய்துவிட்டோம். பிறகு எனக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் ஒரு படம் செய்வேன். ஒரு படம் வித்தியாசமாக பண்ணலாம் என்று செய்வேன். இப்போது இந்த மூன்றுமே கிடையாது. இப்போது 2 விஷயங்கள் தான். ஒரு படத்தின் கதை என்னை மிகவும் கவரவேண்டும். இந்தப் படத்தில் எப்படி செய்யப் போகிறோம், நடிக்கப் போகிறோம் என்று தோன்ற வேண்டும். எனது ரசிகர்களுக்கும் அப்படம் பிடிக்க வேண்டும். இந்த இரண்டை மட்டுமே தற்போது பார்க்கிறேன்.

இதற்கு முன்பாக வித்தியாசமான படம் பண்ண வேண்டும் என்று செய்துள்ளேன். இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன். 'வானம்', 'தொட்டி ஜெயா, 'விண்ணைத்தாண்டி வருவாயா' மற்றும் 'அச்சம் என்பது மடமையடா' என செய்துள்ளேன்.

எனக்கென்ன 15 விருதுகள் கொடுத்து பாராட்டிவிட்டார்களா என்ன?. ஒன்றுமே இல்லை. வித்தியாசமாக படங்கள் செய்து ஏமாந்து போவதை விட, ரசிகர்களுக்காக படம் செய்து அவர்களை இன்னும் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் சிம்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in