

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'வாலு' படத்தைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விக்ரம், சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாயகியாக முதலில் ஒப்பந்தமான சாய்பல்லவி விலகவே, தற்போது தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்துக்கு தமன் இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் வில்லனாக ஆர்.கே.சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரமுடன் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.