Published : 07 Sep 2016 09:08 AM
Last Updated : 07 Sep 2016 09:08 AM
ராஜ்கிரண் நடிப்பில் உருவாகும் 'பவர் பாண்டி' படம் மூலமாக இயக்குநராகவும் அறிமுகமாகிறார் தனுஷ்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்கில் இயங்கி வருபவர் தனுஷ். அனைத்து தளங்கிலுமே தன்னுடைய முத்திரை பதித்திருக்கிறார். தற்போது இயக்குநராகவும் அறிமுகமாக இருக்கிறார்.
"படம் இயக்குவது என்பது தனது நீண்ட நாள் கனவு" என்று பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் தனுஷ். தற்போது அந்த கனவு நனவாகி இருக்கிறது. ராஜ்கிரண் நடிக்கும் 'பவர் பாண்டி' படத்தினை இயக்கவிருக்கிறார் தனுஷ். இதனை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க இருக்கிறார்.
'என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலமாக ராஜ்கிரண் மற்றும் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இருவரும் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். தற்போது தந்தை இயக்குநராக அறிமுகமான நாயகனுடன், தனுஷும் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT