

ஆர்யா தயாரித்து நடிக்க இருக்கும் படத்தினை தான் ராஜேஷ் முதலில் இயக்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் படுதோல்வியைச் சந்தித்தது. தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் இயக்குநர் ராஜேஷ்.
அவர் ஆர்யா, ஜிவா இருவரது படங்களையும் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானாலும், எந்த படத்தினை முதலில் இயக்குவார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், முதலில் ஆர்யா நடிக்கும் படத்தினை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
தனது தயாரிப்பு நிறுவனமான, 'தி ஷோ பீப்பிள்' மூலம் தயாரிக்கவும் செய்கிறார் ஆர்யா. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறா ராஜேஷ். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சந்தானம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2014 ஜுன் முதல் துவங்கும் என அறிவித்திருக்கிறார்கள்.