அரண்மனை 3 உருவாக்க சுந்தர்.சி திட்டம்

அரண்மனை 3 உருவாக்க சுந்தர்.சி திட்டம்
Updated on
1 min read

'அரண்மனை' படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க,  இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.

தமிழக மக்களிடையே 'காஞ்சனா 3' படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, பலரும் பேய் படங்கள் எடுக்க திரும்பியுள்ளனர். இதில் இயக்குநர் சுந்தர்.சியும் இணைந்துள்ளார். 'அரண்மனை 3' எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து விஷால், தமன்னா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

நீண்ட நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, தற்போது தான் சென்னை திரும்பியுள்ளது படக்குழு. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறது. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு 'அரண்மனை 3' எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர்.சி

விஷால் படத்தின் பணிகளுக்கு இடையே, 'அரண்மனை 3' படத்துக்கான கதை விவாதத்தை கவனித்து வருகிறார். விரைவில் இப்பணிகள் முடிவுபெற்றாலும், விஷால் படத்தின் பணிகளை முடித்தவுடன் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றவையாகும். ஆகையால், 'அரண்மனை 3' படத்தை தனது சொந்த நிறுவனமான அவ்னி சினி மேக்ஸ் மூலமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in