ரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு

ரசிகர்கள் கூடியதால் சலசலப்பு: நடிகர் அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களிப்பு
Updated on
1 min read

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். ரசிகர்கள் கூடியதால் அவர் வரிசையில் நிற்காமல் வாக்களித்துச் சென்றார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.

தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்களித்தார்.

அவர் அங்கு வந்திருந்ததை அறிந்து ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடியதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்றனர்.

இதனால்,  வரிசையில் நிற்காமல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்களித்தனர். தென் சென்னை மக்களவைத் தொகுதியில் வாக்களித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in