Last Updated : 28 Mar, 2019 02:23 PM

 

Published : 28 Mar 2019 02:23 PM
Last Updated : 28 Mar 2019 02:23 PM

நானே ‘இளையராஜாவா’ நடிச்சிக்கிட்டிருக்கேன்!’ - இளையராஜா விளக்கம்

‘’என்னுடைய வாழ்க்கையைப் படமாக எடுத்தால் யார் நடிக்கவேண்டும் என்கிற கேள்விக்கு இளையராஜா பதில் அளித்துள்ளார்.

இளையராஜாவுக்கு, கல்லூரிகள் சார்பில் பாராட்டு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இளையராஜா 75 எனும் பெயரில் நடந்து வரும் விழாக்களில், இளையராஜா கலந்துகொண்டு, பாடல்களைப் பாடி வருகிறார். இசையமைக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார் இளையராஜா.

சென்னை ஐஐடியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. அப்போது இளையராஜாவிடம் மாணவர் ஒருவர், ‘உங்கள் வாழ்க்கையைப் பற்றிய சுயசரிதையை எழுதுங்கள் ஐயா’ என்று கேட்டார்.

அதற்கு இளையராஜா பதில் அளித்ததாவது:

‘சுயம்தான் இருக்கும். அதை சரிதை என்று சொல்லிவிடமுடியுமா என்று தெரியவில்லை. வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்கள், அனுபவங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆக, சுயசரிதை புத்தகம் விரைவில் வரும். அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.

அடுத்து மற்றொரு மாணவர், ‘ஐயா, உங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால், உங்கள் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு இளையராஜா தெரிவித்ததாவது:

’நானே இங்கே இளையராஜாவாக நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அப்பா ஒரு பேர் வைத்தார். அதற்குப் பிறகு இன்னொருவர் இன்னொரு பெயரை வைத்தார். பின்னர் பஞ்சு அருணாசலம் அவர்கள் இளையராஜா என்று பெயர் வைத்தார்.

என்னுடைய வாழ்க்கையை சினிமாவாக எடுக்கவேண்டும் என்றெல்லாம் நான் விரும்பவில்லை. ஒருவேளை எடுத்தால் எடுத்துவிட்டுப் போகட்டும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தில் யார் வேண்டுமானாலும் நடித்துவிட்டுப் போகட்டும்.’

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.

   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x