Published : 06 Feb 2019 09:03 AM
Last Updated : 06 Feb 2019 09:03 AM
பிரபுதேவா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. பழி தீர்க்கும் கதைப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் 5 நாயகிகள் நடிக்கின்றனர். மும்பை, இலங்கை பின்னணியில் கதை நகரும். இப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட்டில் உருவாகும் ’ஏபிசிடி 3’ படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா லண்டன் செல்ல உள்ளார். இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘சிங் ஈஸ் ஃபிலிங்’ படத்துக்குப் பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்த பிரபுதேவா, மார்ச் 25-ம் தேதி முதல் ஹிந்தியில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங்க் 3’ படத்தின் வேலைகளைத் தொடங்கவுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT