எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது: ‘காற்றின் மொழி’ குறித்து வித்யா பாலன்

எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது: ‘காற்றின் மொழி’ குறித்து வித்யா பாலன்
Updated on
1 min read

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.

நாளை மறுநாள் (நவம்பர் 16) ‘காற்றின் மொழி’ ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், படத்தையும், அதில் பணிபுரிந்தவர்களையும் வாழ்த்தியுள்ளார் வித்யா பாலன்.

“எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. இந்தியில் ‘துமாரி சுலு’ படத்தில் நான் பண்ண ரோல், தமிழில் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பண்ணியிருக்காங்க. ஜோதிகா, ராதாமோகன், தனஞ்ஜெயன் மற்றும் படத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆல் த பெஸ்ட்.

நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நீங்களும் அதேபோல் காத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in