உடல்நிலை குறித்த வதந்தி: இயக்குநர் செல்வராகவன் விளக்கம்

உடல்நிலை குறித்த வதந்தி: இயக்குநர் செல்வராகவன் விளக்கம்
Updated on
1 min read

உடல்நிலை குறித்த வதந்திக்கு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர்  நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படுதீவிரமாக சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், ‘என்.ஜி.கே’ படமும் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

இந்நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திக்கு இயக்குநர் செல்வராகவன் தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“வணக்கம் நண்பர்களே. இது சிறிய மருத்துவ பரிசோதனை தான்.  நான் மிகவும் நலமாக இருக்கிறேன். எனது வேலையைத் தொடங்கிவிட்டேன். என்.ஜி.கே படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. உங்கள் அனைவரது அன்புக்கும், அக்கறைக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.

 ‘என்.ஜி.கே’ தீபாவளி வெளியீடா இல்லையா என்பது குறித்து செல்வராகவனோ, தயாரிப்பு நிறுவனமோ இதுவரை பதிலளிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in