“கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட ‘கிங்ஸ்டன்’ புது அனுபவம் தரும்” - ஜி.வி.பிரகாஷ்

“கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட ‘கிங்ஸ்டன்’ புது அனுபவம் தரும்” - ஜி.வி.பிரகாஷ்
Updated on
1 min read

கோவை: கிங்ஸ்டன் படம் கடலுக்கு அடியில் எடுத்துள்ளதால் இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.

கிங்ஸ்டன் படத்தின் கதாநாயகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கோவை புரோசோன் மாலில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது: “தூத்துக்குடியில் உள்ள மீனவ கிராமத்தின் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட படம். இந்திய சினிமாவில் பார்க்காத விஷயம் இந்த படத்தில் அமைந்துள்ளது. மார்ச் 7-ம் தேதி வெளியாக இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படம் ஒரு திகில் சாகச படம்.

இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது.

ஹாலிவுட் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள் பற்றி எடுப்பார்கள், ஆனால் இந்த படம் தூத்துக்குடி பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எடுத்துள்ளோம். இது காதல், காமெடி, பேய் படம் கிடையாது. இதில் எல்லாமே புதுமையாக இருக்கும். இந்தக் கதை நான்காம் பாகம் வரை உள்ளது. பெரிய கதையாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களில் சார்ந்தவர்களை கொண்டு படத்தின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in