ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடக்கம்: ஆமீர் கான் பங்கேற்பதாக தகவல்

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடக்கம்: ஆமீர் கான் பங்கேற்பதாக தகவல்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஜெய்பூரில் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி - ஆமீர் கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது ஜெய்பூரில் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு ரஜினி, ஆமீர் கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளார்கள். இந்தப் படப்பிடிப்பு சுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ளது.

ஜெய்பூர் படப்பிடிப்பைத் தொடர்ந்து மீண்டும் விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இறுதிகட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு மே 1-ம் தேதி ‘கூலி’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in