புதிய பட வேலைகளை தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

புதிய பட வேலைகளை தொடங்க வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
Updated on
1 min read

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் நவம்பர் 1 முதல் புதிய படங்களைத் தொடங்க வேண்டாம் என்றும் ஏற்கெனவே கூறியிருந்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. முழுமையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் மறுஅறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளைத் தொடங்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in