சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘குரங்கு பெடல்’ மே 3-ல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘குரங்கு பெடல்’ மே 3-ல் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்ற ‘குரங்கு பெடல்’ திரைப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மதுபானக்கடை’, ‘வட்டம்’ படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியுள்ள படம், ‘குரங்கு பெடல்’. ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இதை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், இப்படம் வரும் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் குறித்து பேசியுள்ள இயக்குநர் கமலக்கண்ணன், “சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவன் தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90 களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக்கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும்படம் என்றாலும் அந்தக் காலகட்டத்தை நினைவுப்படுத்தும் படமாகவும் இது இருக்கும்.

உணர்வுபூர்வமான தொடர்பை இந்தப் படம் கொடுக்கும். பல்வேறு பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் வழங்குகிறார். படத்தைப் பார்த்து பாராட்டிய அவர் பாராட்டினார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in