“சந்தீப் ரெட்டி வங்கா வெளிப்படையானவர்” - ‘அனிமல்’ இயக்குநர் குறித்து சிவகார்த்திகேயன்

“சந்தீப் ரெட்டி வங்கா வெளிப்படையானவர்” - ‘அனிமல்’ இயக்குநர் குறித்து சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா தனது படங்களைப் போலவே மிகவும் வெளிப்படையானவர் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா குறித்து பேசும்போது, “உங்களுடைய ’கலை’ எனக்கு மிகவும் பிடிக்கும். இசையை நீங்கள் பயன்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ‘அனிமல்’ படம் பார்த்தேன். அவர் மிகவும் வெளிப்படையானவர். அவருடைய படங்களை விட அவரது பேட்டிகள் மிகவும் வெளிப்படையாக உள்ளன” என்று தெரிவித்தார்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்த படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.900 கோடி அளவில் வசூலித்தது. ஓடிடியிலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் அதன் ஆணாதிக்க கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in