வதந்திக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி

வதந்திக்கு நயன்தாரா முற்றுப்புள்ளி
Updated on
1 min read

சென்னை: நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் நயன்தாராவின் ஃபாலோயர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை இரு தினங்களுக்கு முன் நெட்டிசன்கள் கண்டனர். அவர் பதிவிட்ட புதிரான பதிவும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து விக்னேஷ் சிவனை, நயன்தாரா ‘அன்பாஃலோ’ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் பிரச்சனை என்றும் வதந்திகள் பரவின. ஆனால், அடுத்து அவரைப் பின் தொடர்ந்து வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே நயன்தாராவின் பக்கத்தில் சிலருடைய ஃபாலோயர்கள் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது அந்தப் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in