பான்-இந்தியா படமாக உருவாகும் ‘சத்தியமங்கலா’

கனக் பாண்டே
கனக் பாண்டே
Updated on
1 min read

சென்னை: அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் ஆர்யன். இவர் இப்போது, ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா படத்தை இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் ‘கோலி சோடா’ முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி, இந்தி நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காளே, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இதை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர். ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு வீர் சமர்த் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குந‌ர் ஆர்யன் பேசும்போது, “ காடுகளின் பின்னணியில் சாகச திரில்லராக இந்தப் படம் உருவாகிறது. பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை நடத்த உள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in