இந்தி தயாரிப்பாளருடன் இணைகிறார் ரஜினிகாந்த்

இந்தி தயாரிப்பாளருடன் இணைகிறார் ரஜினிகாந்த்
Updated on
1 min read

சென்னை: ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இதை,‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இதில் ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆந்திராவில் நடந்து வருகிறது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்தை, பிரபல இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான சஜித் நாடியத்வாலா சந்தித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இருவரும் புதிய படத்தில் இணையப் போவதாகவும் அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in