Published : 31 Jan 2024 08:20 AM
Last Updated : 31 Jan 2024 08:20 AM

திரைப்படங்கள் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும்: விஷ்ணு விஷால் நம்பிக்கை

சென்னை: சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் நாயகன் ஆனவர் விஷ்ணு விஷால். கடந்த 2009-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சரண்யா மோகன், கிஷோர், சூரி உட்பட பலர் நடித்தனர்.

இந்தப் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை அடுத்து விஷ்ணு விஷால் வெளியிட்டப் பதிவில், எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். என் திரைப் பயணத்தின் இந்த 15-வது ஆண்டு, எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், ரஜினிகாந்துடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கிச் செல்வது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x