‘துப்பறிவாளன் 2’ படத்தை தொடங்குகிறார் விஷால்

‘துப்பறிவாளன் 2’ படத்தை தொடங்குகிறார் விஷால்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஷால், ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில், ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி, திருச்சி, சென்னையில் நடந்து வந்தது. இந்நிலையில் இதன் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு காரைக்குடியில் நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதியுடன் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார், விஷால். மிஷ்கின் இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது, விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.இதனால் படத்தில் இருந்து மிஷ்கினை நீக்கிய விஷால், தானே அந்தப் படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in