Published : 12 Oct 2023 03:21 PM
Last Updated : 12 Oct 2023 03:21 PM
திருநெல்வேலி: தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை சென்ற நடிகர் ரஜினிகாந்துக்குக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில் , 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அவர் தவிர ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த், “46 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி படத்துக்காக வந்தது” என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
Young ,Younger & Youngest @rajinikanth #Thalaivar170
— (@rajini_mano) October 11, 2023
pic.twitter.com/YgwtfzaMwT
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT