“இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது” - சந்திரயான் 3 வெற்றி குறித்து ரஜினி

“இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது” - சந்திரயான் 3 வெற்றி குறித்து ரஜினி
Updated on
1 min read

சென்னை: “இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது” என சந்திரயான்-3 வெற்றி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயானை தரையிறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனித்த வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in