நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை

நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
Updated on
1 min read

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில், நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக அரசியலுக்கு கமல் வருவது உறுதியாகியுள்ளது. தொடர்ச்சியாக தமிழக அரசின் செயல்பாடுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் சாடி வருகிறார். மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்,  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது அலுவலகத்தில் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் கமல். ஒவ்வொரு மாவட்டத்தின் நற்பணி மன்றத்திலிருந்தும் 2 பேர் கமலுடன் ஆலோசனைக்கு உள்ளே அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

முன்னதாக கட்சித் தொடங்குவதற்காக சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டதாக கமல் தெரிவித்திருந்தார். இந்த வேளையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதால், கூடிய விரைவில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை கமல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in