‘கெவி’ படத்துக்காக கடும் குளிரில் நடித்த ஷீலா ராஜ்குமார்

‘கெவி’ படத்துக்காக கடும் குளிரில் நடித்த ஷீலா ராஜ்குமார்
Updated on
1 min read

திண்டுக்கல்: ஆத்யக் புரடக்ஷன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிக்கும் படம், 'கெவி'. தமிழ் தயாளன் இயக்குகிறார். அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடிக்கிறார். ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் உட்பட பலர் நடிக்கின்றனர். ராசி தங்கதுரை வசனம் எழுதும் இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்கிறார்.

கொடைக்கானல் அருகே மலை கிராமம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு குளிர் கடுமையாக இருப்பதால், படத்தில் நடிக்க இருந்த சில நடிகைகள், நடிக்காமல் திரும்பிவிட்டனர். இந்நிலையில் குளிரைப் பொருட்படுத்தாமல் 40 நாட்கள் டென்ட்டில் தங்கி, இந்தப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஷீலா ராஜ்குமார். படக்குழு அவரைப் பாராட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in