

‘பாகுபலி’ திரைப்படத் தொடரின் பிரம்மாண்டமான உருவாக்கத்தையும், திரைக்குப் பின்னால் நடந்த உழைப்பையும் விவரிக்கும் வகையில் ‘பாகுபலி: தி டார்ச்பியரர்’ என்ற ஆவணத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ள இத்தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸ், ராணா கலந்துகொண்டனர். பிரபாஸ் பேசும்போது, “இத்தாலியில் கூட மக்கள் என்னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு சென்றபோதும், அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’யை எவ்வளவு விரும்புகிறோம் என்று கூறினார்கள்.
‘பாகுபலி’க்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்போது ராஜமவுலி சாருக்கு போன் செய்து, ‘என்னை இந்த ஜென்மத்தில் சுதந்திரமாகப் பயணம் செய்ய விட மாட்டீர்களா ?” என்று நகைச் சுவையாகக் கேட்பேன்.
முன்பெல்லாம் ஓய்வாக இருக்க மும்பை அல்லது டெல்லி செல்வோம். இப்போது உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்” என்கிறார்.