காரில் செல்லும்போது அதிகாலையில் வழிதெரியாமல் தவிப்பு: மம்மூட்டிக்கு உதவிய சிவகங்கை இளைஞர்

சமூக வலைதளத்தில் ‘நம்ம நண்பர்’ என பாராட்டு
காரில் செல்லும்போது அதிகாலையில் வழிதெரியாமல் தவிப்பு: மம்மூட்டிக்கு உதவிய சிவகங்கை இளைஞர்
Updated on
1 min read

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி​யில் படப்​பிடிப்பை முடித்​துக்​கொண்டு காரில் கேரளா சென்ற போது நடிகர் மம்​மூட்டி அதிகாலையில் ஒரு மணி நேர​மாக வழி தெரி​யாமல் தவித்​தார். அவருக்கு 10 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தில் உடன் வந்து உதவிய​வருக்குப் பாராட்டு தெரி​வித்​து, சமூக வலை​தளங்​களில் மம்​மூட்டி பதி​விட்​டார்.

காரைக்​குடி பகு​தி​யில் படப்​பிடிப்பு நடந்து வரு​கிறது. இதில் பங்​கேற்​று​விட்​டு, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அதி​காலை கேரளா​வுக்கு செல்​வதற்​காக நடிகர் மம்​மூட்டிகாரில் மதுரைக்குச் சென்று கொண்​டிருந்​தார்.

காரைக்​குடி - மேலூர் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நான்​கு​வழிச் சாலை​யில் திருப்​பத்​தூர் அருகே பட்​டமங்​கலம் அருகே அதிகாலை 3 மணி​யள​வில் மம்​மூட்​டி​யின் கார் வந்​தது, அப்​பகு​தி​யில் பல சாலைகள் பிரிந்​த​தால், எந்த சாலை​யில் செல்​வது என்​ப​தில் குழப்​பம் ஏற்​பட்​டது.

கூகுள் மேப் உதவியை நாடி​யும் சரி​யான சாலையை அவர்​களால் கண்​டறிய முடிய​வில்​லை. அப்​பகு​தி​யில் இருந்த பெட்​ரோல் பங்​கில் இருந்​தோர் வழி​காட்​டி​யும் சரி​யான வழியை கண்​டறிய முடி​யாமல் திணறினர்.

இதனால், அவர்​கள் மீண்​டும் காரைக்​குடிக்கே செல்ல முடி​வெடுத்​தனர். ஒரு மணி நேர​மாக அங்​கும், இங்​கு​மாக கார் சென்று வந்​ததை அங்​குள்ள பெட்​ரோல் பங்க் அருகே இருந்த பூலாங்​குறிச்​சி​யைச் சேர்ந்த பாண்​டியன் என்​பவர் கவனித்​தார்.

பின்​னர், அவர்​களிடம் சென்​று, நீங்​கள் எங்கு செல்ல வேண்​டும் என கேட்​டுள்​ளார். காரில் நடிகர் மம்​மூட்டி இருந்​ததை பார்த்த பாண்​டியன் மகிழ்ச்சி அடைந்​தார். பின்​னர், தனது இருசககர வாக​னத்தை எடுத்து கொண்​டு, 10 கி.மீ. வரை முன்னே செல்ல, மம்​மூட்​டி​யின் கார் பின்​தொடர்ந்​தது. மதுரைக்கு செல்​லும் சரி​யான சாலையைக் காட்​டி​விட்டு பாண்​டியன் திரும்​பி​னார்.

இதனால், மகிழ்ச்சி அடைந்த மம்​மூட்​டி, காரில் இருந்து இறங்கி வந்து பாண்​டி​யனுடன் நின்று வீடியோ எடுத்து கொண்​டார். அப்​போது அவரை கட்​டியணைத்து ‘நம்ம பிரண்ட்’ என்​றார். தற்​போது பாண்​டியனை பாராட்​டி, அந்த வீடியோவை சமூக வலை​தளங்​களில் மம்​மூட்டி பதி​விட்​டுள்​ளார்.

இதுகுறித்து பாண்​டியன் கூறுகை​யில், ‘வழி தெரி​யாமல் தவித்த அவர்​களுக்கு முதலில் அங்கு நின்று கொண்​டு​தான் வழி காட்​டினேன். ஆனால் காரில் நடிகர் மம்​மூட்டி இருந்​ததை பார்த்​ததும், எனது இருசக்கர வாக​னத்தை காருக்கு முன்னே ஓட்​டிச்​ சென்​ற​வாறு மதுரை செல்ல வழிகாட்​டினேன். என்னை பாராட்டி மம்​மூட்டி பதி​விட்​டது இரட்​டிப்பு மகிழ்ச்சி’ என்​றார்.

காரில் செல்லும்போது அதிகாலையில் வழிதெரியாமல் தவிப்பு: மம்மூட்டிக்கு உதவிய சிவகங்கை இளைஞர்
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in