பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
Updated on
1 min read

பாலியல் புகார் வழக்​கில் ‘மஞ்​சும்​மள் பாய்​ஸ்’ இயக்குநருக்கு எர்​ணாகுளம் நீதி​மன்​றம் முன் ஜாமீன் வழங்​கி​யுள்​ளது. கொடைக்​கானல் குணா குகை​யில் நடந்த உண்​மைச் சம்​பவத்தை அடிப்​படை​யாக வைத்து மலை​யாளத்​தில் உரு​வான படம், ‘மஞ்​சும்​மள் பாய்​ஸ்’.

சவுபின் சாஹிர், நாத் பாஸி உள்பட பலர் நடித்த இப்​படம் மலை​யாளம் மட்​டுமின்​றி, தமிழ், தெலுங்​கிலும் சூப்​பர் ஹிட்​டானது. உலகம் முழு​வதும் ரூ.250 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்த இப்​படத்தை சிதம்​பரம் இயக்கி இருந்​தார். இவர் இப்​போது ‘பாலன்’ என்ற படத்தை இயக்கி வரு​கிறார்.

இந்​நிலை​யில் இவர் மீது இளம்​பெண் ஒரு​வர், எர்​ணாகுளம் போலீ​ஸில் பாலியல் புகார் கொடுத்​துள்​ளார். அதில், கடந்த 2022-ம் ஆண்​டு, தான் வசிக்​கும் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் தன்னை பாலியல் ரீதி​யாக சிதம்​பரம் துன்​புறுத்​தி​ய​தாகக் கூறி இருந்​தார். இதையடுத்து எர்​ணாகுளம் தெற்கு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வந்​தனர்.

இதற்​கிடையே இவ்​வழக்​கில் முன் ஜாமீன் கோரி எர்​ணாகுளம் மாவட்ட செசன்ஸ் நீதி​மன்​றத்​தில் சிதம்​பரம் மனு தாக்​கல் செய்​திருந்​தார். மனு​வில், அப்​பெண்​ணின் புகாரை மறுத்​துள்ள அவர், தனது நற்​பெயருக்கு களங்​கம் விளைவிக்​கும் நோக்​கத்​துடன் இப்​பு​கார் அளிக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி​யிருந்​தார். இதையடுத்து நிபந்​தனை​களு​டன் அவருக்​கு ஜாமீன்​ வழங்​கப்​பட்​டது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
50 தொகுதிகள்... துணை முதல்வர் பதவி! - பாஜக நிபந்தனைக்கு பணிகிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in