

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய நாவல் ‘ரெண்டாம் மூழம்’. மகாபாரதக் கதையை பீமனின் பார்வையில் சொல்லும் நாவலான இதைத் திரைப்படமாக்க வாசுதேவன் நாயர் முயன்று வந்தார்.
ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், மோகன்லால் நடிப்பில் இக்கதை, ‘மகாபாரதம்’ என்ற பெயரில் படமாக இருந்தது. இதை இயக்க குமார் மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தயாரிப்புப் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, வாசுதேவன் நாயர் அந்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, திரைக்கதையைத் திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் தொடர்பாக வாசுதேவன் நாயரின் குடும்பத்தினரை ஒன்றரை வருடத்துக்கு முன் சந்தித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தி உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வருடம் வெளியாகலாம் என்கிறார்கள்.