டெல்லியில் புத்தர் நினைவு கண்காட்சி: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் புத்தர் நினைவு கண்காட்சி: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று புத்​தர் நினைவு கண்​காட்​சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்​கி​வைத்​தார்.

‘ஒளி மற்​றும் தாமரை: விழிப்​புற்​றவரின் நினை​வுச் சின்​னங்​கள்' என்ற பெயரில் புத்​தருடன் தொடர்​புடைய புனித நினை​வுச்​ சின்​னங்​களின் பிரம்​மாண்ட சர்​வ​தேச கண்​காட்சி டெல்​லி​யில் உள்ள ராய் பித்​தோரா கலாச்​சார வளாகத்​தில் நேற்று தொடங்​கியது. இந்த கண்​காட்​சியை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

அடிமைத்தன காலத்​தின்​போது இந்​தி​யா​வில் இருந்து புத்​தரின் நினை​வுச் சின்​னங்​கள் வெளி​நாடு​களுக்கு கொண்டு செல்​லப்​பட்​டன. அவற்​றில் பெரும்​பாலானவை ஏலம் விடப்​பட்​டன. இதை மத்​திய அரசு தடுத்து நிறுத்​தி​யது. சில நிறு​வனங்​களின் உதவி​யால் சுமார் 125 ஆண்​டு​களுக்​குப் பிறகு புத்​தரின் நினை​வுச் சின்​னங்​கள் மீட்​கப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு வரப்​பட்டு உள்​ளன.

கடந்த சில மாதங்​களில் தாய்​லாந்​து, வியட்​நாம், மங்​கோலி​யா, ரஷ்யா உள்​ளிட்ட நாடு​களில் புத்​தரின் நினை​வுச் சின்​னங்​களின் கண்​காட்சி நடை​பெற்​றது. இதில் லட்​சக்​கணக்​கானோர் பங்​கேற்​றனர். பகவான் புத்​தர் எல்​லோருக்​கும் சொந்​த​மானவர். அவர் ஒட்​டுமொத்த உலகத்​தை​யும் இணைக்​கிறார்.

எனது வாழ்க்​கைக்​கும் பகவான் புத்​தருக்​கும் மிக நெருங்​கிய தொடர்பு இருக்​கிறது. எனது சொந்த ஊரான வட்​நகர், புத்த மத போதனை​களின் மிக முக்​கிய மைய​மாக விளங்​கியது. தற்​போது நான் வாராணசி எம்​பி​யாக உள்​ளேன். எனது தொகு​தி​யில் உள்ள சார​நாத்​தில் புத்​தர் தனது முதல் போதனையை தொடங்​கி​னார்.

பிரதமர் என்ற வகை​யில் சீனா, ஜப்​பான், மங்​கோலி​யா, இலங்​கை, சிங்​கப்​பூரில் உள்ள புத்த மதத் தலங்​களை பார்​வை​யிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்​தது. நான் சீனா, ஜப்​பான், கொரி​யா, மங்​கோலி​யா​வுக்கு செல்​லும் போதெல்​லாம் போதி மரக் கன்​றுகளை​யும் எடுத்​துச் செல்​கிறேன்.

மத்​திய அரசு சார்​பில் நாடு முழு​வதும் உள்ள புத்த வழி​பாட்டு தலங்​கள் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. காஷ்மீரின் பார​முல்​லா​வில் சுமார் 2,500 ஆண்​டு​கள் பழைமை​யான புத்த வழி​பாட்​டுத் தலம் சில மாதங்​களுக்கு முன்பு கண்​டறியப்​பட்​டது. அதை பாது​காத்​து, மேம்​படுத்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டு உள்​ளது. புத்​தர் பாலி மொழி​யில் போதனை செய்​தார். அந்த மொழிக்​கு, செம்​மொழி அந்​தஸ்து வழங்​கப்​பட்​டிருக்​கிறது. புத்​தரின் போதனை​களை இந்​தியா பின்​பற்​றுகிறது. இதன்​ காரண​மாகவே இது போருக்​கான காலம் இல்லை என்று கூறி வரு​கிறேன்​. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

டெல்லியில் புத்தர் நினைவு கண்காட்சி: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
‘காதலுக்கு மரியாதை டூ நண்பன்’: விஜய்யின் ‘ரீமேக்’ பட பட்டியல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in