“ஒவ்​வொரு மொழியை​யும் மதிக்கிறேன்” - ஸ்ரீலீலா பெருமிதம்

“ஒவ்​வொரு மொழியை​யும் மதிக்கிறேன்” - ஸ்ரீலீலா பெருமிதம்
Updated on
1 min read

கன்​னடத்​தில் வெளி​யான ‘கிஸ்’ படம் மூலம் நாயகி​யாக அறிமுகமான ஸ்ரீலீலா, தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரு​கிறார். தமிழில் சிவ​கார்த்​தி​கேயன் ஜோடி​யாக ‘பராசக்​தி’ படத்​தில் நடித்​திருந்​தார். இப்​போது தனுஷின் 55-வது படத்​தில் நடித்து வரும் அவர், இந்​தி​யில் கார்த்திக் ஆர்​யன் ஜோடி​யாக நடித்​துள்​ளார்.

அந்​தந்த மொழிகளில் நடிக்​கும்​போது அம்​மொழி​யில் பேசுவதுதான் அந்த மண்​ணுக்​கும் மக்​களுக்​கும் கொடுக்​கும் மரியாதை என்​றும், அது ரசிகர்​களு​டன் உணர்​வுப்​பூர்​வ​மான பிணைப்பை ஏற்​படுத்​துகிறது என்​றும் அவர் கூறி​யுள்​ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “ஒவ்​வொரு மொழியை​யும் நான் மதிக்​கிறேன்.

நானே 4 அல்​லது 5 மொழிகளில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஓர் இடத்​துக்​குச் செல்​லும்​போது, அங்கு மேடையில் இருந்​தால், கண்​டிப்​பாக அந்த மாநில மொழி​யில் பேச முயல்​கிறேன். அது​தான் அந்த மண்​ணுக்​கும், அவர்​களின் மொழிக்​கும் நான் கொடுக்​கும் மரி​யாதை” என்று கூறி​யுள்​ளார்.

“ஒவ்​வொரு மொழியை​யும் மதிக்கிறேன்” - ஸ்ரீலீலா பெருமிதம்
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in