நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: போதிய ஆதாரம் இல்லாததால் மலையாள நடிகர் திலீப் விடுதலை - முழு விவரம்

6 பேர் குற்றவாளிகள், டிச.12-ல் தண்டனை விவரம் அறிவிப்பு
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகிறார் மலையாள நடிகர் திலீப். படம்: பிடிஐ

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகிறார் மலையாள நடிகர் திலீப். படம்: பிடிஐ

Updated on
3 min read

எர்ணாகுளம்: ​போ​திய ஆதா​ரங்​கள் இல்​லாத​தால் நடிகை பாலியல் வன்​கொடுமை வழக்​கில் மலை​யாள நடிகர் திலீப்பை விடு​தலை செய்து எர்​ணாகுளம் மாவட்ட நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யுள்​ளது.

கேரள மாநிலம் எர்​ணாகுளம் மாவட்​டம் அங்​க​மாலி அருகே அத்​தாணி பகு​தி​யில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்​ர​வரி 17-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒரு​வர் படப்​பிடிப்பு முடிந்து கேர​வன் வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது பின்​னால் காரில் வந்த மர்ம கும்​பல் கேர​வனை தடுத்து நிறுத்​தி, அதன் உள்ளே அத்​து​மீறி நுழைந்​தது. அங்கு இருந்த நடிகையை மர்மநபர்​கள் பாலியல் வன்​கொடுமைசெய்​தனர்.

இதுதொடர்​பாக, அந்த நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து வந்​தனர். விசா​ரணை​யில் பெரும்​பாவூர் அருகே கூவப்​படியை சேர்ந்த பல்​சர் சுனி என்ற சுனில் குமார் உள்பட சிலர் அந்த செயலில் ஈடு​பட்​டதும், அவர் நடிகை​யின் கார் டிரைவ​ராக​வும், உதவி​யாள​ராகவும் இருந்​ததும் தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்​தனர்.

அப்​போது, பிரபல மலை​யாள நடிகர் திலீப்​புக்​கும், சம்​பந்​தப்​பட்ட நடிகைக்​கும் முன்​விரோதம் இருந்​தது தெரிய​வந்​தது. இதன் காரண​மாக, திலீப் சதி திட்​டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்​புறுத்​தல் கொடுத்​த​தாக புகார் கூறப்​பட்​டது. இதையடுத்து நடிகர் திலீப், பல்​சர் சுனில் உள்பட 8 பேரை போலீ​ஸார் கைது செய்து முதல் தகவல் அறிக்​கை​யைப் பதிவு செய்​தனர். 85 நாள்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை எர்​ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. வழக்கு விசா​ரணை​யின்​போது, “இந்த வழக்​குக்​கும் எனக்கு எந்த தொடர்​பும் இல்​லை. திட்​ட​மிட்டு என்னை சிக்க வைத்து உள்​ளனர்” என்று நடிகர் திலீப் தெரி​வித்து வந்​தார். வழக்​கில் மொத்​தம் 251 சாட்​சிகளிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இந்த வழக்​கில் மொத்​தம் 9 பேர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டிருந்​தது. இதில் குற்​றம்​சாட்​டப்​பட்ட முதல் நபராக பல்​சர் சுனி​யும், 8-வது நபராக திலீப்​பும் சேர்க்​கப்​பட்​டிருந்​தனர்.

இந்த வழக்கில் சுமார் 8 ஆண்​டு​கள் விசா​ரணை நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நேற்று இந்த வழக்​கில் தீர்ப்பு வழங்​கப்​பட்​டது. தீர்ப்​பில் நடிகர் திலீப் இந்த வழக்​கி​லிருந்து விடு​தலை செய்​யப்​படு​வ​தாக நீதிபதி அறி​வித்​தார். இந்த வழக்​கில் நடிகர் திலீப் மீதான குற்​றச்​சாட்​டுக்கு போதிய ஆதா​ரம் இல்லை என்று கூறி நீதி​மன்​றம் அவரை விடு​தலை செய்​துள்​ளது. மேலும் அவரது நண்​பர் சரத் என்​பவரை​யும் பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில் இருந்து விடு​வித்​துள்​ளது. அரசு சார்​பில் நீதி​மன்​றத்​தில் சாட்​சி​யம் அளித்த 28 பேர் பிறழ் சாட்​சி​யங்​களாக மாறினர்.

தண்​டனை விவரம்: பல்​சர் சுனில், மார்ட்​டின் ஆண்​டனி, மணி​கண்​டன் உள்​ளிட்ட 6 பேர் குற்​ற​வாளி​கள் என்​றும் எர்​ணாகுளம் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. குற்​ற​வாளி​கள் என்று அறிவிக்​கப்பட்​டுள்ள 6 பேருக்​கும் தண்​டனை விவரம் வரும் 12-ம் தேதி அறிவிக்​கப்​பட உள்​ளது. இந்த வழக்​கில் நடிகர் திலீப் மட்​டுமல்​லாமல், பல்​சர் சுனி என்​கிற என்​.எஸ்​.சுனில், மார்ட்​டின் ஆண்​டனி, பி. மணி​கண்​டன், விஜேஷ், சலீம், பிரதீப், சார்லி தாமஸ், சனில் குமார் என்​கிற மேஸ்​திரி சனில், சரத் ஆகியோர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டிருந்​தது. இதில் திலீப், மேஸ்​திரி சனில், சரத் ஆகியோர் இந்த வழக்​கில் இருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

சதித்​திட்​டம் தீட்​டப்​பட்​டது: நடிகை பாலியல் வன்​கொடுமை வழக்​கில் எனக்கு எதி​ராக சதித்​திட்​டம் தீட்​டப்​பட்​டது என்று வழக்​கி​லிருந்து விடு​தலை​யான பின்​னர் நடிகர் திலீப் பேட்​டியளித்​தார். அவர் மேலும் கூறிய​தாவது: நடிகை பாலியல் வழக்​கானது எனக்கு எதி​ராகத் தீட்​டப்​பட்ட சதித் திட்​டம். இந்த வழக்​கில் எனக்கு எதி​ராக ஆதா​ரங்​கள் இல்​லாத​தால் நீதி​மன்​றம் விடு​தலை செய்​திருக்​கிறது. இவ்​வாறு நடிகர் திலீப் தெரி​வித்​தார்.

வழக்​கறிஞர்​கள்: இந்​நிலை​யில், இந்த வழக்​கி​லிருந்து நடிகர் திலீப் விடு​தலை செய்​யப்​பட்​டதற்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​யப்​படும் என்று நடிகை தரப்​பில் அவரது வழக்​கறிஞர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சிக்​கியது எப்​படி? - இந்த வழக்​கில் கைதான நடிகர் திலீப்​பின் மனைவி நடிகை மஞ்சு வாரியர். இந்​நிலை​யில் திரைத்​துறை​யில் நடிகர் திலீப்​புக்​கு, மலை​யாள நடிகை காவ்யா மாதவனுடன் உள்ள ரகசிய உறவு​களை இன்​னொரு நடிகை, மஞ்சு வாரியரிடம் கூறி​விட்​டார். இதனால் ஆத்​திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்​டார். தன் மனைவி தன்னை விட்டு பிரி்ந்​ததற்​கு, குறிப்​பிட்ட அந்த நடிகை​தான் காரணம் என்று முடிவு செய்த திலீப், கூலிப்​படையை பயன்​படுத்தி நடிகையை காரில் கடத்​திச் சென்று பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்​கி​னார் என்​பது போலீ​ஸாரின் குற்​றச்​சாட்​டு.

இதற்கு உறு​துணை​யாக இருந்​தது பல்​சர் சுனி என்​கிற சுனில் ஆவார். சுனில் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் இருந்​தார். சிறை​யில் சுனில் இருந்​த​போது, நடிகர் திலீப்​புக்கு ஒரு கடிதம் எழு​தி​னார். அந்த கடிதத்​தைக் கொண்​டு​தான் திலீப்பை வழக்​கில் சேர்த்து போலீ​ஸார் கைது செய்​தனர். 2016-ல் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை 2-வ​தாக திரு​மணம்​ செய்​து​கொண்​டார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது. நடிகர்​ திலீப்​ தமிழில்​ ராஜ்ஜி​யம்​ உள்​ளிட்​ட படங்​களில்​ நடித்​துள்​ளார்​.

கேரள அரசு மேல்முறையீடு: இந்த வழக்கில் இருந்து நடிகர் திலீப் விடுவிக்கப் பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ், “நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் ஏற்கெனவே பேசி உள்ளேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை ஏன் நிறுவ முடியவில்லை என்பது குறித்து தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்த வழக்கில் அரசு முன்வைத்த வாதங்கள் 5 புத்தக தொகுப்பு களாக தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பக்கங்கள் 1,512. ஆனால், தீர்ப்பு இந்த ஆவணங்களுடனோ அல்லது விசாரணையுடனோ ஒத்துப்போகவில்லை. மாநில அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நின்றுள்ளது. போலீஸார் இந்த வழக்கை விடா முயற்சியுடன் மேற்கொண்டனர். அரசு தரப்பும், தனது வாதத்தை நீதிமன்றத்தில் வலுவாக வைத்தது” என்றார்.

<div class="paragraphs"><p>நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகிறார் மலையாள நடிகர் திலீப். படம்: பிடிஐ</p><p></p></div>
“என் திரை வாழ்வை அழிக்க நடந்த சதி” - தீர்ப்புக்குப் பின் நடிகர் திலீப் எதிர்வினை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in