அல்லு அர்​ஜுனுக்கு நீதி​மன்றம் சம்மன்

அல்லு அர்​ஜுனுக்கு நீதி​மன்றம் சம்மன்
Updated on
1 min read

‘புஷ்பா 2’ சிறப்​புக் காட்​சி​யின்​போது ஏற்​பட்ட உயி​ரிழப்​புச் சம்​பவம் தொடர்​பான வழக்​கில் நடிகர் அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்க ஹைதராபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்​பி​யுள்​ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்​தின் சிறப்​புக் காட்​சி, ஹைத​ரா​பாத்​தில் உள்ள சந்​தியா திரையரங்​கில் கடந்த 2024-ம் ஆண்டு டிச. 4-ல் நடை​பெற்​றது. அப்​போது அல்லு அர்​ஜுனைக்​காண ஆயிரக்​கணக்​கான ரசிகர்​கள் திரண்​ட​தால் கடும் நெரிசல் ஏற்​பட்​டது. அங்கு நடந்த தள்ளு முள்ளு​வில் ரேவதி என்ற பெண் உயி​ரிழந்​தார்.

அவரது மகன் ஸ்ரீதேஜா பலத்த காயம் அடைந்து மருத்​து​வ​மனையில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்த விவ​காரத்​தால் அல்லு அர்​ஜுன் அப்​போது கைது செய்யப்பட்டு விடு​தலை செய்​யப்​பட்​டார். இவ்​வழக்கு குறித்து திரையரங்கு உரிமை​யாளர்​கள், ஊழியர்​கள், அல்லு அர்ஜுன், தயாரிப்​பாளர் என மொத்​தம் 23 பேர் மீது ஹைதரா​பாத் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இதில் 19 பேருக்கு நாம்பல்லி நீதிமன்றம் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகு​மாறு சம்மன் அனுப்பி உள்​ளது. இதில் 11-வது குற்​ற​வாளி​யாக அல்லு அர்ஜுன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

அல்லு அர்​ஜுனுக்கு நீதி​மன்றம் சம்மன்
அமெரிக்கா - கத்தார் கூட்டு முயற்சியால் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in