பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் தொடக்கம்

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் தொடக்கம்
Updated on
1 min read

யுவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விழாவில் நடிகர் பாபி சிம்ஹா பேசும்போது, ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது.

இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் தொடங்குகிறது

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படம் தொடக்கம்
மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in