Published : 19 Apr 2017 09:39 AM
Last Updated : 19 Apr 2017 09:39 AM

‘பாகுபலி 2’ திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பாகுபலி 2’ திரைப் படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ் ணன், தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் 2-வது பாகம் வரும் 28-ம் தேதி உலகம் முழுவதும் 7,500 திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் திங்கட்கிழமை சென் சார் செய்யப்பட்டது. இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x