16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

Published on

ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சினிமாவில் நடிக்கிறார்.

முன்னதாக, 2007-ம் ஆண்டு வெளியான ‘ஏஞ்சல் ஜான்’ என்ற படத்தில் மோகன்லாலுடன் நடித்திருந்தார். விளையாட்டுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘பல்டி’யை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்குகிறார். அல்போன்ஸ் புத்ரன், சோடா பாபுவாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

எஸ்டிகே ஃபிரேம்ஸ் மற்றும் பினு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சந்தோஷ் டி. குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் தயாரிக்கின்றனர். அலெக்ஸ் ஜே. புலிக்கல் ஒளிப்பதிவு செய்கிறார்.

சாந்தனு பாக்யராஜ் கூறும்போது, “பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படம் புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்கச் சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in